R.Maheshwary / 2022 செப்டெம்பர் 15 , மு.ப. 09:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
மத்திய மாகாணத்தில் இவ்வருடத்தின் இது வரை டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 5000த்தையும் தாண்டி உள்ளதாக சுகாதார திணைக்களத்தின் தொற்றுநோய் ஆராய்ச்சி பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
அவர்களின் ஆய்வின்படி கண்டி மாவட்டத்தில் 3957 டெங்கு நோயாளர்களும் மாத்தளை மாவட்டத்தில் 861 நோயாளர்களும் நுவரெலியா மாவட்டத்தில் 186 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த சில தினங்களாக மத்திய மாகாணத்தில் கடும் மழை பெய்வதன் காரணமாக, டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகமாக காணக்கூடியதாக உள்ளதாகவும் மக்கள் தமது சுற்றுச் சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .