Kogilavani / 2021 ஜனவரி 26 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேன் செனவிரத்ன
மத்திய மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 4,000 ஆக உயர்வடைந்துள்ளதாக, மத்திய மாகாண சுகாதார திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்று (26) காலை 6 மணிவரை 3,987 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் என்று மேற்படித் திணைக்களம் அறிவித்துள்ளது.
கண்டி மாவட்டத்திலேயே அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் மேற்படி மாவட்டத்தில் இதுவரை 3,987 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் மேற்படித் திணைக்களம் அறிவித்துள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் 866 தொற்றாளர்களும் மாத்தளை மாவட்டத்தில் 560 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.
இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்தில், கண்டி மாவட்டத்தில் 24 தொற்றாளர்களும் மாத்தளை மாவட்டத்தில் 27 தொற்றாளர்களும், நுவரெலியா மாவட்டத்தில் 7 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் மேற்படித் திணைக்களம் அறிவித்துள்ளது.
17 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
27 minute ago