Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Kogilavani / 2015 செப்டெம்பர் 01 , மு.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெண் நோயாளி ஒருவருக்கு மருந்துகளை மாற்றிகொடுத்த சம்பவமொன்று நுவரெலியாவுக்குட்பட்ட பகுதியிலுள்ள வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கொழும்பிலிருந்து மரண வீடொன்றுக்காக சென்ற பெண்ணொருவர் (வயது 60) நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட நிலையில் மேற்படி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இப்பெண்ணுக்கு உதவுவதற்காக அப்பெண்ணின் மூத்த மகளும் உடன் இருந்துள்ளார்.
இப்பெண், ஏற்கெனவே கொழும்பிலுள்ள வைத்தியசாலையில், நீரிழிவு நோய், உயர்; குருதி அமுக்கம் போன்றவற்றுக்காக தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்துள்ளதுடன் அச்சிகிச்சைகளுக்கு சென்றமைக்கான கிளினிக் கொப்பியையும்(அப்பியாசக் கொப்பி) மேற்படி வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போது வழங்கியுள்ளார். அப்பியாசக்கொப்பியை பார்த்த பின்பு இப்பெண்ணுக்கு அளிக்க வேண்டிய சிகிச்சை முறைகளையும் மருந்துகளையும் குறிப்பொன்றில் எழுதிவிட்டு வைத்தியர்கள் சென்றுள்ளனர்.
மருத்துவ குறிப்பின் பிரகாரம் கடமையில் இருந்த தாதியர்களும் இப்பெண்ணுக்கு தேவையானவற்றை செய்துள்ளனர்.
இரண்டு நாட்கள் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்றுக்கொண்ட மேற்படி பெண்ணுக்கு மருந்துகளை குடித்த பின்பு உடல் நடுக்கமும் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் இரண்டு நாட்கள் கழித்து ஊசி ஏற்றுவதற்காக இப்பெண்ணை வைத்தியசாலைக்கு வருமாறும் இரத்தத்தை பரிசோதிக்க வேண்டுமெனவும் கூறி அனுப்பியுள்ளனர்.
இப்பெண், முழுமையாக குணமடையாமல் வீட்டுக்கு வந்ததால் அவரது உடல் தொடர்ந்து நடுங்கியுள்ளது.
இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அப்பெண் சிகிச்சைக்காகவும் ஊசியேற்றுவதற்காகவும் வைத்தியசாலைக்கு செல்லும்போது மற்றுமொரு தாதி, குறித்த மருத்துவ குறிப்பு அவருடையதில்லை என்றும் 25 வயது பெண்ணுக்குரியது என்றும் கூறியுள்ளார்.
இப்பெண், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இரண்டு நாட்களும் 60 வயது பெண்ணுக்கு கொடுக்க வேண்டிய மருந்துகளுக்கு பதிலாக 25 வயது பெண்ணின் மருத்துவ குறிப்பின் படியே மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இதனாலே உடல் நடுக்கம் ஏற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இறுதியில் இத்தவறுக்கு வருந்துவதாக மருத்துவ தாதிகள் பதிலளித்துள்ளனர். இவ்விடயத்தை பெரிதுபடுத்தாமல் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பம் அவ்வாறே விட்டுள்ளது.
சகோதர மொழி தெரியாதவர்களே பெரும்பாலும் இங்கு சிகிச்சைக்காக வருவதால் மருந்துகளை மாற்றிகொடுக்கும் செயற்;பாடுகள் தொடர்வதாகவும் இதனால் இந்த வைத்தியசாலையில் கவனயீனமான மரணங்களும் சம்பவித்துள்ளதாகவும் தெரியவருகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .