R.Maheshwary / 2022 ஒக்டோபர் 06 , பி.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதத்.எச்.எம்.ஹேவா
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சலங்கண்டி பிரதேசத்திலுள்ள மண்டபம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த மலசலக்கூட உபகரணங்களை திருடிய சம்பவம் தொடர்பில் நால்வர் ஹட்டன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மண்டபத்தில் பொருத்தப்பட்டிருந்த 1,25,000 ரூபாய் பெறுமதியான மலசலக்கூட உபகரணங்கள் திருடப்பட்டுள்ளதாக கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, சந்தேகநபர்கள் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களை ஹட்டன் மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .