2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மலையக இளைஞர்களுக்கு துணை நிற்கும் ஜப்பான்

Freelancer   / 2022 நவம்பர் 03 , மு.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எஸ்.கணேசன் 

தற்போது ஜப்பானில் பல்வேறு துறைகளில் ஊழியர் பற்றாக்குறை காணப்படுகின்றது. தாதி, நலன் பேணல், தானியங்கி இயந்திர வல்லுநர் மற்றும் ஏனைய துறைகளில் ஊழியர் பற்றாக்குறை உள்ளது. உங்களுக்கு அந்த திறன்கள் காணப்படுமாயின், ஜப்பான் மொழித் திறன் இருக்குமாயின், ஜப்பானில் பணியாற்றுவதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றது என இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகொஷி ஹிதேகி தெரிவித்தார்.

மலையகத்திற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகொஷி ஹிதேகி உள்ளிட்ட குழுவினர் நேற்று (02) இலங்கை தொழிலாளர் காங்கிரசுடன் சந்திப்புக்களை மேற்கொண்டார்.

சந்திப்பின் பின் ஹட்டனில் உள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகொஷி ஹிதேகி இவ்வாறு தெரிவித்தார்.

 இதன்போது அவர் கருத்து தெரிவிக்கையில், 

ஜப்பானில் தொழில்வாய்ப்புகள் அதிகமாக காணப்படுவதுடன், பணியாற்றுவதற்கான சாத்தியங்களும் காணப்படுகின்றது. அதனை நாம் வரவேற்கின்றோம். குறிப்பாக இளையோருக்கு அதற்கான ஆசை இருக்கும்.

ஜப்பானில் மாத்திரமல்ல உலகளாவிய ரீதியிலுள்ள நாடுகளில் இளம் திறமையுள்ள தொழிலாளர்களுக்கு வாய்ப்புகள் காணப்படுகின்றன. இந்த நிலையமானது இளையோருக்கு பல்வேறு துறைகளில் பயிற்சிகளை வழங்குவது அற்புதமானது.

இலங்கையில் பின்தங்கிய பகுதியாக மலையகம் காணப்படுகின்றது. தொடர்ந்தும் எங்களுடைய உதவி மலையகத்திற்கும் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .