2026 மே 02, சனிக்கிழமை

‘மலையக இளைஞர்களுக்கு முன்னுரிமை வேண்டும்’

பா.திருஞானம்   / 2019 மார்ச் 05 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையக இளைஞர்களின் எண்ணங்களுக்கும் கருத்துகளுக்கும் முன்னுரிமை வழங்கவேண்டும் என, பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.  

பதுளை கச்சேரியில் அமைந்துள்ள இராஜாங்க அமைச்சின் காரியாலயத்தில் நடைபெற்ற இளைஞர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,  

மலையக இளைஞர்கள், தற்போது சுயமாக சிந்தித்து, தன்னிச்சையாச் செயற்பட​ ஆரம்பித்துவிட்டனர் எனக் கூறிய அவர், இதற்கு, 1,000 ரூபாய் சம்பள உயர்வு கோரி, இளைஞர்களால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள் சிறந்த உதாரணமாகும் என்றும் அவர் கூறினார்.  

ஆனால், சில இளைஞர் குழுக்கள், தனித்தனியா பிரிந்துச் செல்வதாகவும் இதற்கு, மலையத் தலைவர்கள், இளைஞர்களின் எண்ணங்களுக்கும் கருத்துகளுக்கும் முன்னுரிமை கொடுக்கா​தமையே காரணம் என்றும் அவர் கூறினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .