2025 மே 19, திங்கட்கிழமை

மல்லாக்க புரண்டது பஸ்: 27 பேர் காயம்: அறுவர் கவலைக்கிடம்

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 30 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ, டி சந்ரு

உடபுஸ்ஸலாவையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று, வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானாதில் 27 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் வலப்பனை பிரதேச வைத்தியசாலை மற்றும் ரிக்கிலகஸ்கட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வலப்பனை- மஹவ பகுதியில் இந்த விபத்துஇன்று (30) காலை 1030 மணியளவில்   இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பிலிருந்து உடபுஸ்ஸலாவையில் நடைபெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்டு, மீண்டும் மட்டக்களப்பு நோக்கி திரும்பியவர்களே இந்த விபத்துக்கு முகம் கொடுத்துள்ளனர். அதில் காயமடைந்தவர்களில் அறுவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X