2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மஸ்கெலியா பிரதேச சபையின் பட்ஜெட் நிறைவேறியது

R.Maheshwary   / 2022 நவம்பர் 14 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

மஸ்கெலியா பிரதேச சபையின் அடுத்த ஆண்டுக்கான வரவு-செலவு திட்டம் 9 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது.

சபை அமர்வுகள் இன்று (14) காலை ஆரம்பமானதை அடுத்து, வரவு- செலவு திட்ட யோசனை முன்வைக்கப்பட்டது.

இதற்கு  ஆதரவாக 12 வாக்குகளும் எதிராக 3 வாக்குகள் வழங்கப்பட்ட நிலையில்,  வரவு- செலவு திட்டம் 9 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

 ஜக்கிய தேசிய கட்சியியைச் சேர்ந்த  தொழிலாளர் தேசிய சங்கத்தின் மூலம் போட்டி இட்ட ப்ரௌன்லோ வட்டார உறுப்பினர்,ப்ரௌன்ஸ்வீக் வட்டார உறுப்பினர் மற்றும்  ஸ்டோக்ஹோம் வட்டார உறுப்பினர்  ஆகிய மூவரும்  வரவு- செலவு திட்டத்தை எதிர்த்து வாக்களித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .