2025 மே 19, திங்கட்கிழமை

மஸ்கெலியா விவகாரம்: செந்தில் தொண்டமான் கண்டனம்

Editorial   / 2022 செப்டெம்பர் 20 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மஸ்கெலியா பெருந்தோட்ட  நிறுவனம் தொழில் சட்டத்தை தொடர்ந்து மீறி  வருகின்றமை மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் மீதான கம்பனிகளின் நவீன அடிமைத்தனம் தொடர்பில் அம்பட்டிக்கந்த தோட்ட தொழிற்சாலையில் உள்ள இ.தொ.கா  உறுப்பினர்களுடன் இ.தொ.கா.வின் தலைவர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல் நடத்தினார். 

 
அம்பட்டிக்கந்த தோட்ட தொழிற்சாலைக்கு  விஜயம் மேற்கொண்ட செந்தில் தொண்டமான் 
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்களை சந்தித்ததுடன் மஸ்கெலியா பெருந்தோட்ட  நிறுவனத்தின் அடக்குமுறைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்   
 
மஸ்கெலியா பெருந்தோட்ட  நிறுவனம் தொழில் சட்டத்தை தொடர்ந்து மீறுவதற்கு  கடும் எதிர்ப்பை வெளியிட்ட 
அவர்  தொழிலாளர்கள் மீதான நவீன அடிமைத்தனத்துக்கு முற்றிப்புள்ளி  வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 
 
தொழிலாளர்களின் உரிமைகள் மீட்கப்பட்டு, நிர்வாகத்தின் அணுகுமுறை மாறும் வரை தொழிற்சாலையில் தயாரிக்கப்படும்  தேயிலை, தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றுவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X