2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மஸ்கெலியாவில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகம்

Freelancer   / 2023 மே 18 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மஸ்கெலியா நகரில் உள்ள மின்சார சபை குடியிருப்பு பகுதியிலும் மாவட்ட வைத்தியசாலையில் உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள வளர்ப்பு நாட்களை இரவு நேரத்தில் சிறுத்தைகள் பிடித்து செல்வதாக அப் பகுதியில் உள்ள குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து நல்லதண்ணி வன பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் பயன் இல்லை எனவும்,இப் பகுதியில் உள்ள குடியிருப்பாளர்கள் மிகவும் பீதியுடன் உள்ளனர்.

மாலை 6 மணிக்கு பின்னர் வெளியில் செல்ல பயந்து வீடுகளில் உள்ளேயே அடங்கி கிடக்க வேண்டிய நிலையில் உள்ளதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கவணம் செலுத்தி சிறுத்தைகளை பிடித்து வன பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .