2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

மாகாண சபைத் தேர்தலில் ஊடகவியலாளர்கள் குழு

எம். செல்வராஜா   / 2020 ஜூன் 29 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை மாவட்ட தமிழ், சிங்கள ஊடகவியலாளர்கள் குழுவொன்று, நடைபெறவுள்ள ஊவா மாகாண சபைத் தேர்தலில் களம் இறங்கவுள்ளது.

பதுளை மாவட்ட ஊடகவியலாளர் சங்கம், ஊவா மாகாண 'யுனிமீடியா' அமைப்பு ஆகியன இணைந்தே, தேர்தலில் போட்டியிடவுள்ளன.

இந்த ஊடகவியலாளர்கள் குழுவினர், தமது அமைப்பை அரசியல் கட்சி ரீதியாகப் பதிவு செய்யும் நடவடிக்கைகளை தற்போது மேற்கொண்டுள்ளதோடு, அடுத்து வரும் ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஆரம்ப தேர்தல் களம் இறங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இக்குழு எந்தவொரு அரசியல் கட்சியையும் சாராத வகையில், சுயமாக களம் இறங்குவதுடன், ஆரோக்கியச் சூழலைக் கொண்ட முன்னேற்றகரமான மாற்றமொன்றை சமூகங்கள் மத்தியில் ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .