Freelancer / 2025 ஜூன் 06 , பி.ப. 08:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா - உடப்புசல்லாவ பிரதான வீதியில் இன்று மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, வீதியோரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.
நுவரெலியா, உடப்புசல்லாவ பிரதான வீதியிலுள்ள இராகலை புரூக்சைட் பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றது.
விபத்தில் காயமடைந்த சிறுவன், பெண் மற்றும் வேனின் சாரதி ஆகியோர் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பாக இராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். R
38 minute ago
2 hours ago
6 hours ago
01 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
2 hours ago
6 hours ago
01 Apr 2026