2025 ஜூன் 30, திங்கட்கிழமை

மாத்தளையில் மேல் நீதிமன்றம்

Editorial   / 2017 நவம்பர் 28 , பி.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தளை மாவட்டத்தில், மேல் நீதிமன்றம் ஒன்றை அமைக்க நீதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக, நீதியமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமன்ன கூறினார்.

மாத்தளை மக்கள், மேல் நீதிமன்ற வழக்குகளுக்காக கண்டிக்குச் செல்ல வேண்டுடியுள்ளது. மேல்நீதிமன்றம் இல்லாத நிர்வாக மாவட்டமாக மாத்தளை மாவட்டம் விளங்குவதாகவும் பொதுமக்களின் நன்மை கருதியே, மாத்தளை மாவட்டத்தில் மேல் நீதிமன்றம் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில், மாத்தளை லக்கலயில் மேல் நீதிமன்ற கட்டடம் நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் இதற்கான வேலைத்திட்டங்கள் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

இந்நிலையில், மாத்தளை மொரகஹகந்த நீர்த்தேக்கத் திட்டத்துக்குள், மாத்தளை சுற்றுலா நீதவான் நீதிமன்ற கட்டடம் உள்வாங்கப்படவுள்ளதாக, தெரியவருகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X