2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மிதந்துக் கொண்டிருந்த மாணவியின் சடலம் மீட்பு

Editorial   / 2022 ஜூலை 22 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எஸ்.கணேசன்

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல்கொத்மலை நீர்தேக்கத்தில் மிதந்துகொண்டிருந்த பாடசாலை மாணவியின் சடலம், பிர​தேசவாசிகளின் தகவல்களை அடுத்து நேற்று (22) மாலை மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

லிந்துலை பெயார்பீல்ட் (மிளகுசேனை) தோட்டத்தைச் சேர்ந்த 19 வயதுடைய முத்துரட்ணம் ஜீலோஜினி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.  

லிந்துலை சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவி தனியார் வகுப்புக்காக, தலவாக்கலை நகரத்துக்குச் செல்வதாக கூறிவிட்டு, நேற்றுக்காலை வந்ததாக  அவரது உறவினர்கள் வாக்குமூலமளித்துள்ளார்.

அந்த மாணவின், இவ்வருடம் இடம்பெறவிருக்குமு் க.பொ.த உயர் தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளவர் என விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது எனத் தெரிவித் பொலிஸார், பல கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

நுவரெலியா நீதிமன்ற நீதிவானின் மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .