2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மின்சாரப்பட்டியல்களை வீதியில் வீசியவருக்கு அபராதம்

R.Maheshwary   / 2022 ஜூன் 19 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

மின்சாரப்பட்டியல்களை வீதியில் வீசியமைத் தொடர்பில், ஹட்டன்- டிக்கோயா நகரசபையினரால் வழக்து தொடரப்பட்ட நபரிடமிருந்து அபராதத் தொகை அறிவிடப்பட்டுள்ளது.

ஹட்டன்- நீதவான் நீதிமன்றில் சந்தேகநபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதால், அவரை பத்தாயிரம் ரூபாய் அபராதத் தொகையை செலுத்துமாறு, ஹட்டன் நீதவான் பருக்டீன் உத்தரவிட்டுள்ளார்.

ஹட்டன்- ஹிஜிராபுர பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரிடமே இந்த அபராதத் தொகை அறவிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர், ஹட்டன் நகரிலுள்ள குறுக்கு வீதியொன்றில், தனது வீட்டின் மின்சாரப்பட்டியல்களை வீசியிருந்தாகவும், இது தொடர்பில் ஹட்டன்-டிக்கோயா நகரசபையின் பொது சுகாதார பரிசோதகர் ஆர்.ஆர்.எஸ்.மெதவலவால் சந்தேகநபருக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X