Editorial / 2019 ஓகஸ்ட் 14 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்தினபுரி - கிரியெல்ல, தும்பர பகுதியில், மின்னல் தாக்கி இளைஞரொருவர், நேற்று (13) பலியாகியுள்ளார்.
மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதான மஞ்சுள என்ற இளைஞரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வீட்டில் இரும்புக் கட்டில் ஒன்றுக்கு அருகில், தரையில் உறங்கிக் கொண்டிருந்த போதே மேற்படி இளைஞர் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
59 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
2 hours ago
4 hours ago