Editorial / 2023 மார்ச் 05 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
படுகாயமடைந்த 50 வயதான நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார் என ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு கோட்டையில் இருந்து பதுளையை நோக்கி நேற்று (04) பயணித்துக்கொண்டிருந்த உடரட்ட மெனிக்கே ரயிலில். இதல்கஸ்ஹின்ன பிரதேசத்தில் வைத்து நபரொருவர் மோதுண்டு மரணமடைந்துள்ளார்.
இதல்கஸ்ஹின்ன, உடபிலித்தென்ன பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்.எம்.ஜயசேகர (வயத 50) என்பவதே உயிரிழந்துள்ளார் என ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.
படுகாயமடைந்த அந்த நபரை ரயில் பயணிகள் தூக்கிச் சென்று இதல்கஸ்ஹின்ன பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அவர், தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார் என ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர். (பாலித ஆரியவங்ச)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .