2025 ஜூலை 05, சனிக்கிழமை

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

Editorial   / 2019 ஜனவரி 04 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ, சுஜிதா,சுரேன் கௌசல்யா, ரமேஷ்

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து, உயிரிழந்த நிலையில் பெண்ணின் சடலம் ​இன்று காலை  (04) மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நீர்த்தேக்கத்தில் சடலமொன்று மிதந்து வருவதைக் கண்ட அப்பகுதி மக்கள், தலவாக்கலை பொலிஸ் நிலையத்துக்கு வழங்கிய தகவலுக்கமைய, சடலம் இன்று (04) காலை மீட்கப்பட்டுள்ளது.

சில தினங்கள் சடலம் நீர்த்தேக்கத்தில் இருந்திருப்பதனால், சடலத்தை அடையாளம் காணமுடியாதுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட சடலம் பிரேதப் பரிசோதனைக்காக, நுவரெலியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .