Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜூலை 17 , பி.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் பாரியளவில் எண்ணெய் படலம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான எண்ணெய் படலமானது நீர்த்தேக்கத்தின் கரையோரங்களில் படிந்துள்ளது.
எண்ணெய் படலம் காணப்படுவதால், நீர்த்தேக்கத்திலுள்ள பாசித் தாவரங்கள் அகன்று நீர்த்தேக்கத்தின் மத்திய பகுதி, கரையோரங்களில் மிதப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்துக்கு நீரை கொண்டு வரும் பிரதான இரு ஆறுகளான நானுஓய, ஆக்ரோயா ஆறுகளின் நீரிலிருந்தே இவ்வாறு எண்ணெய் படலம் படிந்திருக்கலாம் என மலைநாட்டு சுற்றாடல் சங்கம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு எண்ணெய் படலம் படிந்துள்ளதால், நீர்வாழ் உயிரினங்கள், நீர் வாழ் தாவரங்கள் என்பவை அழிவடைவதுடன், நீர்த்தேக்கதத்தின் அழகுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மலைநாட்டு சுற்றாடல் சங்கம் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
3 hours ago