R.Maheshwary / 2021 ஜூலை 21 , பி.ப. 01:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமணசிறி குணதிலக
மொனராகலை பிரதேச சுகாதார அதிகாரி அலுவலகத்துக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 2 நாள்களில், 251 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என, மொனராகலை பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர் துஷித அத்தநாயக்க தெரிவித்தார்.
இதற்கமைய, இதுவரை மொனராகலை மாவட்டத்தில் 4,592 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 1,106 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் மொனராகலை, பிபிலை, மெதகம மற்றும் கதிர்காம்ம் ஆகிய பகுதிகளிலேயே அதிகம் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, தற்போது மெதகம, புத்தல மற்றும் வெல்லவாய ஆகிய வைத்தியசாலைகளில் கொரோனா சிகிச்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026