Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 செப்டெம்பர் 29 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று, வீதியை விட்டு விலகி, வலப்பனை பகுதியில் உள்ள மண் மேட்டில் மோதி விபத்துக்குள்ளானதாக வலப்பனை பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா- வலப்பனை பிரதான வீதியின் மஹ ஊவா பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த வீதி செங்குத்தான சரிவைக் கொண்டுள்ளது, மஹ ஊவா வளைவுப் பகுதியில் பல விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன, எனவே வீதி அபிவிருத்தி அதிகார சபை செங்குத்தான சரிவில் ஒரு பாதுகாப்பு மண் மேட்டை அமைத்துள்ளது, இதனால் பேருந்து வீதியை விட்டு விலகி மண் மேட்டில் மோதி விபத்துக்குள்ளானது என்று வலப்பனை பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 28 பேரை ஏற்றிக்கொண்டு நுவரெலியாவுக்குச் சென்று யாழ்ப்பாணம் திரும்பிக் கொண்டிருந்த பேருந்து, பேருந்தின் பிரேக்கிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறால் வீதியை விட்டு விலகி பாதுகாப்பு மண் மேட்டில் மோதி பேருந்து நின்றது.
விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், விபத்தில் சிக்கிய பேருந்தில் இருந்த பயணிகள் யாழ்ப்பாணத்திலிருந்து வந்த மாற்று பேருந்தில் சென்றுவிட்டதாகவும் வலப்பனை பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் பேருந்தும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
16 minute ago
31 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
31 minute ago
53 minute ago
1 hours ago