Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 18, புதன்கிழமை
Janu / 2024 டிசெம்பர் 19 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை பகுதியில் ரயிலில் மோதி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் வியாழக்கிழமை (19) அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கொட்டகலை கங்கைபுரத்தை (வூட்டன்) சேர்ந்த வெள்ளசாமி ஜெயகுமார் (வயது 40) திருமணமான ஒரு பிள்ளையின் தந்தை என பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கொட்டகலை ரயில் நிலையத்திற்கு அருகாமையில் கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்று கொண்டிருந்த இரவு நேர ரயிலில் மோதுண்டு குறித்த நபர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் கொட்டகலை ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு வைத்திய பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக ரயில் நிலையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குறித்த நபர் தன்னுயிரை மாய்த்துக்கொண்டாரா? அல்லது ரயிலில் மோதுண்டு இறந்தாரா? என்பது தொடர்பாக திம்புள்ள – பத்தனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எஸ்.கணேசன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago