2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ரேந்தபொல விபத்தில் இருவர் காயம்

Editorial   / 2023 மே 22 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

வெளிமடை,  கெப்பட்டிபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரேந்தபொல பகுதியில் திங்கட்கிழமை (22) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

  வீதியை செப்பனிடுவதற்காக, தார் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றை ஏற்றி சென்ற வீதி அபிவிருத்தி அதிகார  சபைக்கு உரித்தான பார ஊர்தி, வேக கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

பார ஊர்தியை செலுத்திய சாரதி, மற்றுமொருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற் கொண்டு வருவதாகவும் கெப்பட்டிபொல பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .