2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

லொறிகளில் மணல் ஏற்றிச்சென்ற 18 பேர் கைது

Kogilavani   / 2015 செப்டெம்பர் 29 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொனராகலை, தனமல்வில- கிதுல்கோட்டே பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி லொறிகளில் மணல் ஏற்றிச்சென்றதாக கூறப்படும் 18 பேரை கைதுசெய்துள்ளதுடன் மணலுடன் 18 லொறிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இரத்தினபுரி, வெல்லவாய, கடுவெல மற்றும் எம்பிலிப்பிட்டிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 25,28,33,50, 60 வயதுடைய நபர்களே இவ்வாறு கைதசேய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலைத் தொடர்ந்து திங்கட்கிழமை(28) இரவு, மேற்படி பகுதியில் திடீர் சோதனைகளை மேற்கொண்ட பொலிஸார் மேற்படி நபர்களை கைதுசெய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .