R.Maheshwary / 2022 ஓகஸ்ட் 16 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அபோட்ஸ்லி தோட்டத்தின் மொண்டிபெயார் பிரிவிலுள்ள லயன் குடியிருப்பு ஒன்றில் இன்று (16) காலை தீபரவல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது 20 வீடுகளைக் கொண்ட குறித்த லயக்குடியிருப்பின் 6 வீடுகள் பகுதியளவில் எரிந்து நாசமாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
காலை 8 மணியளவில் ஏற்பட்ட தீயானது ஏனைய வீடுகளுக்கு பரவாமல் தோட்ட நிர்வாக அதிகாரிகளும் தோட்டத் தொழிலாளர்களும் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதுடன் தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
தீ விபத்து தொடர்பில் ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026