2025 ஜூன் 23, திங்கட்கிழமை

வேலாயுதம் நியமிக்கப்படாமையானது சிறுபான்மையினருக்கு ஏமாற்றம்

Kogilavani   / 2015 செப்டெம்பர் 03 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமச்சந்திரன்

முன்னாள் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் கே.வேலாயுதத்தின் பெயர் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியலில் சிபாரிசு செய்யப்பட்டிருந்த நிலையில் அவரை தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிக்காமல் விட்டமையானது சிறுபான்மை மக்களுக்கு பெறும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக மலையக அரசியல் விழிப்புணர்வு கழகத்தின் நிறைவேற்று செயலாளர் ஜுவன் இராஜேந்திரன் தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

'நாடாளுமன்றத் தேர்தலில் 196 உறுப்பினர்கள் மக்களின் வாக்குகளால் வெற்றிபெற்று தெரிவாகும்போது, ஒவ்வொரு கட்சியும் பெற்றுக்கொள்ளும் ஆசனங்களின் அடிப்படையில் 29 பேர் தேசியப் பட்டியலில் உறுப்பினர்களாக நியமிக்கப்படுகின்றனர்.  

அந்தவகையில் இம்முறை ஐக்கிய தேசியக் கட்சியில் 13 உறுப்பினர்களதும்  ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் 12 உறுப்பினர்களதும் தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பில் 2 உறுப்பினர்களதும் மக்கள் விடுதலை முன்னணியில் 2 உறுப்பினர்களதும் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் முன்னாள் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் கே.வேலாயுதம், கடந்த 2010 ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

எனினும், பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ, 2014 ஆம் ஆண்டு, ஊவா மாகாணசபை தேர்தலிலே போட்டியிட்டபோது அவரின் இடத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினராக நியமனம் பெறும் அதிஷ்டத்தை இவர் பெற்றுக்கொண்டார்.

நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் போட்டியிடாமல் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவதற்காக, வேலாயுதத்தின் பெயர் சிபாரிசு செய்யப்பட்டபோதிலும், அவரை ஐக்கிய தேசியக் கட்சி நியமிக்கவில்லை.

எனவே, சிறுபான்மை மக்களின் வாக்குகளை அதிகமாக பெற்று, வெற்றி பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியானது, சிறுபான்மை மக்களின் வேண்டுகோளை ஏற்று முன்னாள் கைத்தொழில் இராஜாங்க அமைச்சருக்கு தேசிய பட்டியலில் அங்கத்துவத்தை வழங்க வேண்டும்' என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .