Editorial / 2020 மார்ச் 25 , பி.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீலமேகம் பிரசாந்த்
தலவாக்கலை, வட்டகொடை தோட்டத்தில் வேலை செய்யும் அனைவருக்கும் முகக்கவசமும் நோய் கிருமி தொற்றாமல் இருப்பதற்கான மூலிகைக் கசாயமும், தோட்டத் தொழிலாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
கொரோனா தாக்கம் ஆரம்பித்த காலம் முதல், தோட்ட நிர்வாக அதிகாரிகளை இணைத்து, தோட்ட முகாமையாளரால் வாட்ஸ்அப் குழுவொன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது என்றும் வெளிநாடுகளில் இருந்தோ வெளி மாவட்டங்களில் இருந்தோ தோட்டத்துக்கு வரும் நபர்கள், வாட்ஸ்ஆப் குழு அங்கத்தவர்களால் இணங்காணப்பட்டு, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே, தோட்டத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர் என்றும் தோட்ட நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.
பின்னர், முகக்கவசம் அணியுமாறு, அரசாங்கம் உத்தரவிட்ட பின்னரே, வட்டகொடை உள்ளிட்ட அனைத்துத் தோட்டத் தொழிளர்களுக்கும் முகக்கவசமும் மூலிகை கசாயமும் வழங்கப்பட்டுள்ன என்றும் அவர்களுக்கான நிவாரணப் பொருள்களும் தயார்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .