Editorial / 2025 பெப்ரவரி 11 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
வட்டவளை பைனஸ் வனப்பகுதியில் திங்கட்கிழமை (10) ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக அட்டன் வன பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளனர்.
வட்டவளை ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள அட்டன் ஓயா அருகே உள்ள வனப்பகுதிக்கும், மவுண்டன் எஸ்டேட்டுக்குச் செல்லும் வீதிக்கும் அருகில் உள்ள வனப்பகுதிக்கு ஒரு குழுவினர் தீ வைத்துள்ளனர்.
வறண்ட வானிலை காரணமாக, தீ வேகமாக மலை சிகரங்களுக்கு பரவி கிட்டத்தட்ட 10 ஏக்கர் நிலத்தை நாசமாக்கியுள்ளது.
மத்திய மலைகளின் மேற்கு சரிவுகளில் நிலவும் வறண்ட சூழ்நிலை வேண்டுமென்றே காட்டுத் தீக்கு வழிவகுத்ததாக ஹட்டன் வன பாதுகாப்பு அலுவலகம் எச்சரித்துள்ளது. (S.R)
பொறுப்பானவர்கள் குறித்து தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையம் அல்லது வன பாதுகாப்பு அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொள்கிறார்கள். (S.R)

38 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
4 hours ago