Editorial / 2018 ஜனவரி 15 , மு.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
“ஊவா மாகாண சபையின் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) உறுப்பினர் சமந்த வித்யாரத்ன மற்றும் ஜே.வி.பியின் ஆசிரிய சங்கப் பிரதிநிதிகள் இருவருக்கு எதிராக, 500 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி, வழக்குத் தொடரவுள்ளேன்” என, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
“பாடசாலை அதிபர் ஒருவரை நான், மண்டியிடச் செய்ததாக தெரிவிக்கப்பட்ட செய்திகளால் எனது பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தே, இந்த வழக்கைத் தாக்கல் செய்யவுள்ளேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைபாட்டின் நகலைப் பெற்றுக்கொள்வதற்காக, பதுளை பொலிஸ் அதிகாரி அலுவலகத்துக்கு முதலமைச்சர் நேற்று (14) சென்றிருந்தார். இதன்போதே, மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
“பாடசாலை அதிபர் ஒருவரை நான், மண்டியிடச் செய்ததாகத் தெரிவிக்கப்பட்ட செய்திகளால், எனது பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தே, இந்த வழக்கைத் தாக்கல் செய்யவுள்ளேன்” என, அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் நகலைப் பெற்றுக்கொள்வதற்காக, பதுளை பொலிஸ் அதிகாரி அலுவலகத்துக்கு முதலமைச்சர் நேற்று (14) சென்றிருந்தார். இதன்போதே, மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
11 minute ago
1 hours ago
20 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
1 hours ago
20 Apr 2026