2025 ஜூலை 14, திங்கட்கிழமை

விசா இல்லாமலிருந்த நான்கு இந்தியர்கள் கைது

Editorial   / 2017 செப்டெம்பர் 18 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டாரவளை, கோவிலுக்கருகில் விசா மற்றும் கடவுச்சீட்டு இல்லாமலிருந்த நான்கு இந்தியர்களை பண்டார​வளைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்தச் சந்தேக நபர்கள் கோவிலுக்கு அருகில் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் நேற்று(17) இரவு 11 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்தச் சந்தேக நபர்கள் நால்வரும் 24,25,29,53 வயதுடையவர்கள் எனவும் இவர்களை நீதிமன்றத்தில் இன்று (18) முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் பண்டாரவளைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .