2025 ஜூன் 25, புதன்கிழமை

விதையை உட்கொண்ட சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Editorial   / 2019 ஓகஸ்ட் 07 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

மடுல்சீமை- கொக்காகல தோட்டத்தில் ஒரு வகை விதையை உட்கொண்ட 7 சிறுவர்கள் நோய்வாய்ப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சிறுவர்கள் மெட்டிகாதென்ன மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மடுல்சீமை கொக்காலை தோட்டத்தின் 23ஆம் இலக்க தொடர் குடியிருப்பில் வசிக்கும் 10 வயது சிறுவர்கள் இருவர், 4 வயதுடைய சிறுவர்கள் இருவர், 5,3 வயதுடைய சிறுவர்கள் மூவரே இவ்வாறு நோய்வாய்ப்பட்டுள்ளனர்.

குறித்த தோட்ட கோயிலில் இடம்பெற்ற விழாவொன்றின் பின்னர், குறித்த சிறுவர்கள் விதையை உட் கொண்டப் பின்னரே இவ்வாறு தீடீர் நோய்வாய்ப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .