2025 மே 10, சனிக்கிழமை

விபத்தில் இராணுவ வீரர் பலி

Editorial   / 2018 ஜூன் 25 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச

மஹியங்கனை, தெஹித்தகண்டிய வீதி, தெல்தெனியவில், இன்று (25) காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், இராணுவ வீரர் ஒருவர் பலியாகியுள்ளாரென, கிராந்துருகோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

கல்நெவ, பகமுன பிரதேசத்தைச் சேர்ந்த முதியன்சலாகே மஹேஷ் பஸ்நாயக்க (வயது 23) என்பவரே, விபத்தில் உயிரிழந்துள்ளார். இவர், இலங்கை இராணுவப் பிரிவு, சிங்க கதிர்காமம் படைமுகாமில் பணியாற்றிவந்தவரென, விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேற்படி இராணுவ வீரர் பயணித்த மோட்டார் சைக்கிள், வீதியை விட்டு விலகிச் சென்று, மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X