2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

விபத்தில் ஒருவர் பலி

Kogilavani   / 2021 ஜனவரி 14 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

கொழும்பு-பதுளை பிரதான வீதி, பலாங்கொடை கிரிந்திகல பகுதியில், இன்று (14) காலை இடம்பெற்ற விபத்தில், ஒருவர் பலியாகியுள்ளார் என்று, பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரவளை பட்டியகெதர பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்.எம்.நெதுன் என்பவரே விபத்தில் பலியாகியுள்ளார்.

பண்டாரவளை நோக்கிப் பயணித்த டிப்பர் ரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரே பலியாகியுள்ளார்.
பிரேதப் பரிசோதனைக்காக பலாங்கொடை வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்துத் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X