2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் சிக்கிய நான்காவது இளைஞரும் உயிரிழந்தார்

R.Maheshwary   / 2022 செப்டெம்பர் 13 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ஆராச்சி

இந்த மாதம் 9ஆம் திகதி, கேகாலை- ரங்வலயில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வந்த நான்காவது இளைஞரும் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் 27 வயதான 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மேலும் 2 இளைஞர்கள் கேகாலை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்தனர்.

இந்த நிலையில், சிகிச்சைப் பெற்று வந்த 27 வயதான எம்.எச்.எம். அல்பாப் என்ற இளைஞர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்துடன் தொடர்புடைய 18 வயது சாரதி கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X