2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

விபத்தில் பெண் பலி; ஒருவர் படுகாயம்

Editorial   / 2018 டிசெம்பர் 07 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச

பண்டாவரளை நகரில், நேற்று (6)  இடம்பெற்ற விபத்தில், பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பண்டாரவளை இனிகம்பெத்த பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரிகா விஜேரத்ன என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேற்படி பெண்,  தனது நண்பருடன் பாதசாரிக் கடவையினூடாகப் பாதையைக் கடக்க முயன்றபோது, ஓட்டோ ஒன்றில் மோதுண்டு உயிரிழந்துள்ளாரென பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துடன் தொடர்புடைய ஓட்டோவின் சாரதியைக் கைதுசெய்துள்ள பொலிஸார், ஓட்டோவையும் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .