2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

விபத்தில் பெண்ணொருவர் பலி இருவர் காயம்

R.Maheshwary   / 2022 நவம்பர் 02 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா       

தனியார் பஸ் ஒன்றும் ஓட்டோவொன்றும் நேருக்கு நேராக மோதி விபத்துக்குள்ளாகியதில் பெண்ணொருவர் பலியானதுடன் மேலும் இருவர் ஆபத்தான நிலையில், பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பதுளை –பண்டாரவளை பிரதான வழியில் ஹல்பே என்ற இடத்தில் இன்று இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் பூனாகலை தோட்டத்தைச் சேர்ந்த ராஜரட்ணம் பரமேஸ்வரி என்ற 33 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளதுடன், அவரது கணவனும் சகோதரனும்  பலத்த காயங்களுக்குள்ளாகி பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 உயரிழந்த பெண்ணும் காயமடைந்தவர்களும் ஓட்டோவில் பயணித்தவர்கள் என தெரிவித்துள்ள எல்ல பொலிஸார், தனியார் பஸ்ஸின் சாரதியை கைதுசெய்துள்ளதுடன், விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .