Janu / 2023 நவம்பர் 07 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
குருநாகலிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த லொறி ஒன்று வட்டவளை பாடசாலைக்கு அருகில் வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகிய சம்பவமொன்று செவ்வாய்க்கிழமை (07) பதிவாகியுள்ளது.
எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடை விற்பனைக்காக ஹட்டன் நோக்கி பயணித்த லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் விபத்தில் காயமடைந்த சாரதி வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

1 hours ago
6 hours ago
28 Dec 2025
28 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
28 Dec 2025
28 Dec 2025