Kogilavani / 2021 ஜனவரி 01 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா
புதுவருட விருந்துக்குச் சென்ற நான்கு பிள்ளைகளின் தந்தையொருவர், சடலமாக மீட்கப்பட்டச் சம்பவம் ஹட்டனில் இடம்பெற்றுள்ளது.
ஹட்டன் தோட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகன் குமார் (வயது 38) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேற்படி நபர், நேற்று (31) இரவு 8.30 மணியளவில் சக நண்பர்களுடன் புதுவருட விருந்துக்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில் இன்று (1) காலை அவர் வீடு திரும்பாத நிலையில், அவரைத் தேடிச் சென்றபோதே தேயிலை மலையில் அவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக, அந்நபரின் மனைவி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில், ஹட்டன் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன் பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
விருந்து இடம்பெற்ற இடத்திலிருந்து சில மீற்றர் தொலைவிருந்தே மேற்படி நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago