2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

விவசாய நிலங்களுக்குள் பாய்ந்த காட்டு வெள்ளம்

Freelancer   / 2023 மே 22 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

கடந்த சில நாட்களாக மத்திய மலைநாட்டில் இடி மின்னலுடன் கனத்த மழை பெய்து வருகிறது. இதனால் மலையக பகுதிகளில் உள்ள விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்கள் பெருந்தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக இப்பகுதியில் உள்ள விவசாயிகள் பயிரிட பட்ட காணியில் காட்டு வெள்ளம் புகுந்ததால் பயிர்கள் அழிந்து போன நிலையில் உள்ளது.

பெருந்தோட்ட தொழிலாளர்கள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக நாளாந்தம் தங்கள் பரிக்கும் தேயிலை பச்சை கொழுந்து கன மழை காரணமாகவும், அட்டை கடி காரணமாக பரிக்க முடியாத நிலை தோன்றியுள்ளது என தொழிலாளர்கள். தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .