2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வெடிபொருட்களுடன் ஒருவர் கைது

Freelancer   / 2022 ஓகஸ்ட் 18 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராமு  தனராஜா

ஹாலிஎல - உடுவரை பகுதியில் 50 டிட்டனைடருடன்  நபர் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

35 வயதான சந்தேகநபர், விற்பனைக்காக வெடிபொருள்கள் வைத்திருப்பதாக ஹாலிஎல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ருவன் குணதிலகவுக்கு  கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து, சந்தேக நபரின் வீட்டை பொலிஸார்  சுற்றிவளைத்து,  வெடி பொருள்களைக்  கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட உடுவரை பிரதேசத்தைச்  சேர்ந்த சந்தேகநபரை, பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X