Janu / 2024 நவம்பர் 27 , பி.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த சில நாட்களாக பெய்து வரும் அடை மழையால் நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதில் நுவரெலியா மாநகர சபைக்கு சொந்தமான விக்டோரியா பூங்கா மற்றும் அதனை அண்மித்துள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால் விக்டோரியா பூங்காவில் சிறுவர் பூங்கா பகுதிக்குள் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், பெய்து வரும் தொடர் மழை காரணமாக குறித்த சிறுவர் பூங்கா குளமாக மாறி உள்ளது. அத்தோடு சிறுவர்கள் விளையாடும் இடம் முழுவதும் மழை நீர் சூழ்ந்து காணப்படுகிறது மேலும் விளையாட்டு உபகரணங்கள், இருக்கைகள் மற்றும் மாநகர சபையினால் பராமரிப்பு செய்து வந்த மலர் தோட்டங்கள் நீரில் மூழ்கி கிடக்கின்றமை குறிப்பிடத்தக்கது .






7 hours ago
05 Nov 2025
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
05 Nov 2025
05 Nov 2025