2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

வைத்தியசாலையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

Kogilavani   / 2017 ஜூலை 04 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ

பலாங்கொடை, மெதபெந்த ஆயுர்வேத வைத்தியசாலையை, முழுமையாக அபிவிருத்தி செய்வதற்கு, சப்ரகமுவ மாகாணசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

கண்டி, பதுளை, மொனராகலை, ஹம்பந்தோட்டை, பலாங்கொடை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த பெருமளவிலான நோயாளர்கள், மேற்படி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், இடநெருக்கடியை வைத்தியசாலை எதிர்கொண்டுள்ளது.
வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள இட நெருக்கடியை தீர்ப்பதற்கு சப்ரகமுவ மாகாண சுகாதார அமைச்சு, நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைவாகவே, இவ்வைத்தியசாலை அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

மேற்படி வைத்தியசாலைக்கு நேற்று விஜயம் மேற்கொண்ட சப்ரகமுவ மாகாண முதலமைச்சரும் சுகாதார அமைச்சருமான மஹிபால ஹேரத், வைத்தியசாலைகளின் நிலமைகளை நேரில் கேட்டறிந்துகொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .