R.Maheshwary / 2021 டிசெம்பர் 08 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமணசிறி குணதிலக
செவனகல பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளில் இந்த மாதம் 5ஆம் திகதி பெய்த கடும் மழை மற்றும் மின்னல் தாக்கத்தால் 22 வீடுகள், இரண்டு கோழிப் பண்ணைகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செவனகல பிரதேச செயலாளர் ஆர்.பி.என். ஆர் பிரியசாந்த தெரிவித்துள்ளார்.
கோழிப் பண்ணைகள் இரண்டு நீரில் மூழ்கியதால் சுமார் 5,000 கோழிகள் உயிரிழந்துள்ளன.
அத்துடன் மின்னல் தாக்கியதில் நான்கு வீடுகளின் மின்சார கட்டமைப்புகள் செயழிலந்துள்ளன.
இவ்வாறு சேதமடைந்த வீடுகள், சொத்துகள், கோழி பண்ணைகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான மதிப்பீட்டு பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
8 minute ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
5 hours ago
6 hours ago
6 hours ago