R.Maheshwary / 2023 பெப்ரவரி 27 , மு.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
ஹட்டன் நகரில் கடந்த சில நாட்களாக இரண்டு நாட்களாக ஒரு தடவை மட்டுமே தேசிய நீர் வழங்கல் அலுவலகம் குடிநீரை வழங்குவதாக ஹட்டன் நகர மக்கள் தெரிவிக்கின்றனர்.
சுமார் பத்து ஆயிரம் மக்கள் வாழ்ந்து வரும் நிலையில், அப் பகுதியில் கடுமையான வெப்பம் நிலவுவதால் அப் பகுதியில் உள்ள அனைத்து நீர் ஊற்றுகளும் வற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் நீர் நிலைகளில் பெறப்படும் நீரை சேமித்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவி்த்தனர்.
அத்துடன் வரட்சியுடனான வானிலையை அடுத்து, விஷமிகள் காடுகளுக்கு தீ வைப்பதால் நீர் ஊற்றுகள் வற்றிப் போகும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .