Nirosh / 2021 ஜனவரி 09 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட் 19 சுகாதார விதிமுறையை மீறி வகுப்பு நடத்திய ஆசிரியைக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது .
ஹட்டன் நகரில் சுகாதார விதிமுறையை மீறி வகுப்பு நடத்துவதாக ஹட்டன் டிக்கோயா நகரசபை பொது சுகாதார பரிசோதகருக்கு பொது மக்களினால் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து, ஹட்டன் டிக்கோயா பொது சுகாதார பரிசோதகரால்
வகுப்பு நடத்திய குறித்த ஆசிரியைக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து குறித்த ஆசிரியை நேற்று (08) ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
26 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
3 hours ago