2026 மே 02, சனிக்கிழமை

ஹெரோய்ன், கசிப்புடன் நால்வர் கைது

Editorial   / 2020 ஏப்ரல் 17 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், எம்.கிருஸ்ணா   

ஹட்டன், கினிகத்தேனையில் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த மூவரை,  கலால் திணைக்கள அதிகாரிகள், இன்று (1) கைதுசெய்துள்ளனர். 

அத்துடன், கொட்டகலை பத்தனையிலும் கசிப்பு காய்ச்சிவதற்கான 40 லீற்றர் கோடாவுடன்  நபரொருவர்   மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார்.

ஹட்டன், கலால் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்தே மேற்படிச் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு, சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி நால்வரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .