2025 ஜூன் 23, திங்கட்கிழமை

மது போதையில் வாகனம் செலுத்தியவருக்கு 16 ஆயிரம் ரூபா அபராதம்

Kogilavani   / 2012 நவம்பர் 02 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                           (கே. என்.முனாஷா)
வாகன அனுமதிப் பத்திரமின்றி மது போதையில் முச்சக்கரவண்டியை செலுத்திய நபருக்கு நீர்கொழும்பு மேலதிக நீதவான் 16 ஆயிரம் ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

லீனியாகம பிரதேசத்தை சேரந்த நிமல் சமர நாயக்க என்பவரே இக்குற்றத்தை எதிர்கொண்டுள்ளார்.

மேற்படி நபர் சாரதி அனுமதிப்பத்திரம், காப்புறுதி சான்றிதழ் மற்றும்; வாகன அனுமதிப் பத்திரமின்றி மதுபோதையில் வாகனத்தை செலுத்திய நிலையில் நேற்று வியாழக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்நிலையில், இந்நபர் தனது குற்றங்களை ஒப்புக்கொண்டதையடுத்து நீர்கொழும்பு மேலதிக நீதவான் டப்ளியூ.கே.துலானி எஸ்.வீரதுங்க 16 ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .