2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

நீர்கொழும்பில் 23 நடைபாதையோர கடைகள் அகற்றப்பட்டன

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 25 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 (கே.என்.முனாஷா )

நீர்கொழும்பு நகர மத்தியில் அமைக்கப்பட்டிருந்த 23 நடைபாதையோரக் கடைகள் நீர்கொழும்பு பொலிஸாரினால் நேற்று செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டுள்ளன.

நீர்கொழும்பு ராஜபக்ஷ வீதியில் (றீகல் படமாளிகைக்கு அருகில்)  அமைக்கப்பட்டிருந்த கடைகளே  பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ளன.

அரசாங்க நிறுவனங்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் இக்கடைகள் அமைந்துள்ளதாக நீர்கொழும்பு பொலிஸ் நிலைய சுற்றாடல் பிரிவினர் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து நீர்கொழும்பு பிரதான மஜிஸ்திரேட் ஏ.எம்.என்.பி.அமரசிங்க இதற்கான உத்தரவை நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை பிறப்பித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .