2025 ஜூன் 23, திங்கட்கிழமை

120 இலட்சம் ரூபா செலவில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2012 நவம்பர் 25 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே. என்.முனாஷா)

ஜனாதிபதியின் 67 ஆவது பிறந்த தினத்தையொட்டியும் ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலத்தையிட்டும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் 120 இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நீர்;கொழும்பு முன்னக்கரையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

மேல்மாகாண அமைச்சர் நிமல்லான்ஸாவின் அமைப்பினால்; ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் தையல் இயந்திரங்கள், சைக்கிள்கள், மீன்பிடி உபகரணங்கள், வீட்டு உபகரணங்கள், கற்றல் உபகரணங்கள் மற்றும் வீடமைப்பு உதவித் தொகையும் பயனாளிகளுககு வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் பாரியார் சட்டத்தரணி புஸ்பா ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன் நீர்கொழும்பு மேயர் அன்ரணி ஜயவீர, பிரதி மேயர் எம்.எஸ்எம்.சகாவுல்லா, மாநகர சபை உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .