2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

13 நீரிறைக்கும் மோட்டார்களை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 22 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.என்.முனாஷா)

நீரிறைக்கும் மோட்டார்களைத் திருடியதாகத் தெரிவிக்கப்படும் பதிவுசெய்யப்பட்ட குற்றவாளி ஒருவரை  நேற்று சனிக்கிழமை கைதுசெய்துள்ளதுடன், அவரிடமிருந்து 13 நீரிறைக்கும் மோட்டார்களை கைப்பற்றியுள்ளதாகவும்  நீர்கொழும்பு பொலிஸ் விசேட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி ஜகத் நிசாந்த தெரிவித்தார்.

சந்தேக நபர் வீடு ஒன்றில் நீரிறைக்கும் மோட்டார் இயந்திரத்தை திருடியபோது பிடிபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இச்சந்தேக நபர் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதுடன், பாடசாலை  மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் போதைப்பொருளை  விற்பனை செய்து வந்துள்ளதாகவும் விசாரணையிலிருந்து  தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இச்சந்தேக பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் ஆவாரெனவும் நீர்கொழும்பு பொலிஸ் விசேட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X